×

விற்பனை சரிவு; சந்தைகள் மூடலால் செடிகளில் கருகிய மல்லிகை பூக்கள்: திருவள்ளூர், காஞ்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்ட விவசாயிகள் வேதனை

சென்னை: கொரோனா ஊரடங்கால் திருவள்ளூர், காஞ்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் சந்தைகள் மூடப்பட்டதால் மல்லிகையை விற்க முடியாமல் செடிகளிலேயே பறிக்காமல் விட்டனர். அந்த வகையில் பல லட்சம் ரூபாய் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சி மற்றும் சுற்றுவட்டாரா பகுதியில் உள்ள மாவட்ட மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளின் முக்கிய சந்தையாக சென்னை உள்ளது. இதனால் தினந்தோறும் அதிகாலை 3 மணி முதல் மதியம் 3 மணிவரை மலர் பூக்கடை மற்றும் கோயம்பேடு மார்க்கெட் செயல்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான மலர் விவசாயிகள் சென்னைக்கு வருவார்கள். குறிப்பாக ஜாதி மல்லி, கனகாம்பரம், சாமந்தி, மல்லிகை போன்றவற்றை உதிரியாகவும், தொடுத்தும் கொண்டு வருவது வழக்கம். இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் பலரும் மொத்த வியாபாரியிடம் விற்பனை செய்துவிட்டு செல்வார்கள்.

மல்லிகையை பொறுத்தவரை உள்ளூர் சந்தைகளில் நிரந்தரமாகவே மல்லிகை கிலோ ₹500 முதல் ₹1,000 வரை விற்கும். விழாக்காலங்களில் ₹2 ஆயிரம் வரை விற்பனையாகும். அப்படிச் சந்தைகளில் வரவேற்பு பெற்ற மல்லிகையை தற்போது வாங்க ஆளில்லை. ‘கொரோனா’ ஊரடங்கு உத்தரவால் திருமண நிகழ்ச்சிகள், விழாக்கள், கோயில் பூஜைகள் அனைத்தும் தடைப்பட்டன.மேலும், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கியதால் மல்லிகைப் பூக்களின் தேவை இல்லாமல் போனது. மல்லிகைப்பூ அத்தியாவசியப்பொருட்கள் பட்டியலில் வராது என்று சொல்லி சந்தைகளுக்கு கொண்டு விற்கவும் போலீஸார் அனுமதி மறுத்தனர்.

அதனால், பூக்களை மிகவும் குறைந்த விலையில் விற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதில் பறிக்கும் கூலி கூட கிடைக்காததால், மாவட்டத்தில் உள்ள சிறு விவசாயிகள், தங்களது நிலத்தில் மல்லிகைப்பூக்களை பறிக்காமல் விட்டுள்ளனர். இவை செடிகளிலே கருகி கீழே உதிர்ந்து விழுகின்றன.மல்லிகைப்பூ வியாபாரம் மூலம் கிடைத்த வருமானத்தில் தினசரி குடும்ப செலவை கவனித்து வந்த சிறு விவசாயிகள் தற்போது வருமானம் இன்றி மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மல்லிகையை பொறுத்தவரை உள்ளூர் சந்தைகளில் நிரந்தரமாகவே மல்லிகை கிலோ ₹500 முதல் ₹1,000 வரை விற்கும். விழாக்காலங்களில் ₹2 ஆயிரம் வரை விற்பனையாகும். சந்தைகளில் வரவேற்பு பெற்ற மல்லிகையை தற்போது வாங்க ஆளில்லை

Tags : Crowds ,plants ,markets ,districts ,Kanchi ,Tiruvallur ,Jasmine Flowers , Jasmine flowers, Thiruvallur, Kanchi, farmers suffering
× RELATED கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன்...