×

கவுசல்யா தந்தை விடுதலை குற்றத்தை நிரூபிக்க முடியாதது யார் தவறு? : கமல் கேள்வி

சென்னை: உடுமலை சங்கர் ஆணவக் கொலை மேல்முறையீட்டு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேரில் கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டார். மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது: ஆணவக் கொலைகள் நம் சமுதாயத்தில் புரயோடிபோயிருக்கும் நச்சுகளின் அடையாளம். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது அரசின் கடமை. தமிழகத்தையே உலுக்கிய கொலையில் ஏ1 குற்றவாளி மீதான குற்றத்தைகூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு?

Tags : Kaushalya ,Kamal , Kausalya's father, Liberation, Kamal
× RELATED கமலுடன் மீண்டும் இணைந்த லோகேஷ் கனகராஜ்