மதுரை: மதுரையில் முழு ஊரடங்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரையில் நாளை நள்ளிரவு முதல் தீவிர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அரசு ஆணை ஒன்றை குறிப்பிட்டு வெளியாகியுள்ள தகவல் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றும், சம்பந்தப்பட்ட ஆணையில் எந்த தேதியும் குறிப்பிடப்படவில்லை என்றும் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.