டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் பொது வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிளாஸ்மா சிகிச்சைக்கு பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து அவர் பொது வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார். மேலும் ஆக்சிஜன் கருவி உதவியின்றி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சுவாசிப்பதாகவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.