டெல்லி: விமான பயணத்தின் போது பயணி யாருக்காவது கொரோனா தொற்று இருந்தால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தொற்று உறுதியான நபர் பயணித்த விமானத்தில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. விமானி உள்ளிட்ட மொத்தக் குழுவும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.