திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து ஆண்டு பருவ தேர்வுகளும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் நடக்கும் என அறிவிக்கப்பட்ட தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு முந்தைய பருவ தேர்வு முடிவுகளின் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.