×

தேன்கனிக்கோட்டை அருகே 2 குட்டிகளுடன் யானைகள் முகாம்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே, உணவு தேடி குட்டிகளுடன் 4 யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், அய்யூர் வனப்பகுதியை ஒட்டி அரசஜ்ஜூர், அய்யூர், தின்னூர், சித்தலிங்காகொட்டாய், குடியூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில், கடந்த சில நாட்களாக 2 குட்டிகளுடன் 4 யானைகள் முகாமிட்டு, உணவு தேடி சுற்றி வருகின்றன. இந்த யானைகள் தக்காளி, முட்டைகோஸ் தோட்டங்களை நாசம் செய்து வருவதால், கிராம மக்கள் பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர். மேலும், மாலை நேரங்களில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கிராம பகுதிகளுக்குள் யானைகள் நுழையாதவாறு சோலார் மின்வேலி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Elephants Camp ,Thenkanikottai Thenkanikottai , Elephants Camp , 2 cubs , Thenkanikottai
× RELATED ஓசூர் வனப்பகுதியில் 30 யானைகள் முகாம்: வனத்துறை எச்சரிக்கை