கோவை: கோவையில் இறந்த யானைக்கு மற்றொரு ஆண் யானையின் தந்தம் குத்தியதால் வாயில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யானையின் மேல் தாடையில் 9 செ மீ விட்டமும், 15 செ மீ ஆழமும் கொண்ட காயம் ஏற்பட்டுள்ளது என்று வனத்துறை தெரிவித்துள்ளது. வாயில் ஏற்பட்ட காயத்தால் 10 நாட்களாக யானை உணவு உட்கொள்ளாததால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இறந்த யானையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அருகிலேயே புதைக்கப்படும் என்று வன அலுவலர் வெங்கடேஷ் கூறியுள்ளார்.