×

காணாமல்போன முதியவர் குளத்தில் சடலமாக மீட்பு: கொலையா? என விசாரணை

புழல்: செங்குன்றத்தில் காணாமல்போன முதியவர் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை யாரேனும் கொலை செய்து வீசினரா என்று போலீசார் விசாரிக்கின்றனர். செங்குன்றம் தீர்த்தங்கரையம்பட்டு திருவிக தெருவை சேர்ந்தவர் இளங்கோ (76). கடந்த 19ம் தேதியில் இருந்து இவரை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடிவந்தனர்.  இந்நிலையில், புள்ளிலைன் ஊராட்சி பாலாஜி கார்டன் சுடுகாடு அருகே உள்ள குளத்தில் முதியவர் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மிதப்பதாக செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், சடலமாக கிடந்தது காணாமல் போன முதியவர் இளங்கோ என்பது தெரியவந்தது.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை யாராவது கொலை செய்து குளத்தில் வீசி சென்றனரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.   


Tags : Missing Elderly Pond , Old man, corpse, murder
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...