×

எல்லைப் பிரச்சினை காரணமாக சீனா நிறுவனங்களுடனான ரூ.5 ஆயிரம் கோடி ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு: மராட்டிய அரசு அதிரடி

மும்பை: எல்லைப் பிரச்சினையில் சீனா நிறுவனங்களுடனான ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான 3 ஒப்பந்தங்களை மராட்டிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. சமீபத்தில் மராட்டிய மாநிலத்தில் 2.0 என்ற முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதில் சீனா நிறுவனங்களுடன் ரூ.5 ஆயிரம் கோடி  மதிப்பிலான 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்த நிலையில் எல்லைப் பிரச்சினைகளில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களை தொடர்ந்து இந்த 3 ஒப்பந்தங்களை மராட்டிய மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் கூறுகையில், எல்லைப் பிரச்சினை குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சீன நிறுவனங்களுடன் மேலதிக ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம் என்று வெளிவிவகார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தம் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் சிங்கப்பூர், தென் கொரியா, அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் பல இந்திய நிறுவனங்கள் உள்ளன. மற்ற ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மாநில அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது என்று தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.



Tags : government ,Rs ,Chinese , Border Issue, China Company, Rs 5 Thousand Crore
× RELATED ரூ.1000 கோடி மதிப்பு பங்குகள் வடிவிலான 10...