மதுராந்தகம்: மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் பொறியாளாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த ஒன்றிய பொறியாளர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொறியாளாருக்கு கொரோனா உறுதியானதால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அலுவலகத்தின் முதல் மாடி மூடப்பட்டுள்ளது.