×

பார்ட்டியில் நடிகருடன் சண்டை சுஷாந்த்தை மிரட்டிய சல்மான் கான்: பகீர் தகவல்கள்

பார்ட்டியில் நடிகருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக, சுஷாந்த் சிங்கை சல்மான் கான் மிரட்டியுள்ளார். இதையடுத்துதான் பல படங்களிலிருந்து சுஷாந்த் நீக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் தற்போது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 14ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது பட வாய்ப்புகளை பாலிவுட் பிரமுகர்கள் சிலர் பறித்ததால் அவர் மனஅழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடிகர் சல்மான் கான், தயாரிப்பாளர்கள் கரண் ஜோஹர், ஏக்தா கபூர், சஞ்சய் லீலா பன்சாலி உள்பட 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் சுஷாந்த், சல்மான் கான் இடையே பிரச்னை ஏற்பட என்ன காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரம்: சுஷாந்த் சிங்கை தான் தயாரிக்கும் படத்தில் நடிக்க வைக்க சல்மான் கான் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பாலிவுட்டில் நடந்த நைட் பார்ட்டி ஒன்றுக்கு சுஷாந்த் சென்றுள்ளார். அங்கு இளம் நடிகர் சூரஜ் பன்ச்சோலி இருந்துள்ளார்.

இவர் நடிகர் ஆதித்ய பன்ச்சோலியின் மகன். ஏதோ ஒரு விஷயத்தில் சுஷாந்துக்கும் சூரஜ்ஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சூரஜ், தனது வழிகாட்டியாக கருதும் சல்மான் கானிடம் இது பற்றி புகார் கூறியுள்ளார். சூரஜை சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் செய்து அவரை புரமோட் செய்து வந்தவர் சல்மான் கான். சூரஜ் புகார் கூறியதும், உடனே சுஷாந்துக்கு போன் செய்து சல்மான் கான் விசாரித்துள்ளார். அப்போது சுஷாந்த் தனது தரப்பு நியாயத்தை பற்றி பேசியிருக்கிறார். வழக்கமாக சல்மான் பிறரிடம் கோபத்தில் விசாரிக்கும்போது, எதிர்முனையில் இருப்பவர் பவ்யமாக நடந்துகொள்வதையே அவர் விரும்புவாராம். சுஷாந்த் அப்படி நடந்துகொள்ளாததால் அவரை சல்மான் கான், மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். அதன் பிறகு, சுஷாந்தை தனது படத்தில் அறிமுகப்படுத்தும் திட்டத்தையும் கைவிட்டுள்ளார். அத்துடன் நிற்காமல், தனக்கு நெருங்கிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் சுஷாந்தை படத்தில் நடிக்கவைக்க ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என சல்மான் கான் தடை போட்டுள்ளார். இதனால் அடுத்தடுத்து சில படங்களிலிருந்து சுஷாந்த் நீக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாகவே அவர் மன அழுத்தத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது.

13 லட்சம் ஃபாலோயர்களை இழந்த அலியா பட்
சில மாதங்களுக்கு முன், ‘சுஷாந்த் சிங் என்றால் யார்’ என டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஏளனமாக கேட்டிருந்தார் நடிகை அலியா பட். இதனால் அவரையும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். டிவிட்டரில் ‘நெபோடிஸம்’ என ஹேஷ்டேக்கில் வாரிசு நடிகையான அலியா பட், பிற வாரிசு நட்சத்திரங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து அதிக அளவில் டிரெண்டிங் ஆனது. இதையடுத்து டிவிட்டரில் தனது 13 லட்சம் ஃபாலோயர்களை அலியா பட் இழந்துள்ளார். சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்டோரையும் டிவிட்டரில் பின்பற்றுவதை லட்சக்கணக்கானோர் நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் சத்ருகன் சின்ஹாவின் மகளும், நடிகையுமான சோனாக்ஷி சின்ஹா டிவிட்டரில் இருந்து விலகியுள்ளார்.

பாடகர்கள் சோனு நிகம், அர்ஜித் சிங் புகார்
சுஷாந்த் சிங் போல் தங்களையும் சல்மான் கான் பழிவாங்கியதாக பாடகர்கள் சோனு நிகம், அர்ஜித் சிங் கூறியுள்ளனர். ‘எனது குரலில் பாடலை பதிவு செய்துவிட்டு, படத்தில் வேறொருவரை வைத்து அதே பாடலை பாட வைப்பார் அந்த ஹீரோ (சல்மான் கான்). இதுபோல் பலமுறை எனக்கு நடந்துள்ளது. தனக்கு பிடிக்காதவர்களை இப்படியும் அவர் பழிவாங்குவார். அரசியல் செல்வாக்கால் பாலிவுட்டில் அவர் தாதாவாக நடந்துகொள்கிறார்’ என சோனு நிகம் புகார் கூறியுள்ளார். அர்ஜித் சிங் கூறும்போது, ‘சல்மான் நடித்த சுல்தான் படத்தில் ஒரு பாடலை பாடினேன். சமூக வலைத்தளத்தில் சல்மானை பற்றி நான் தவறாக பேசியதாக தகவல் பரவியது. எதையும் விசாரிக்காமல் சுல்தான் படத்திலிருந்து எனது பாடலை அவர் நீக்கிவிட்டார். நான் மன்னிப்பு கேட்டும் பயனில்லை’ என்றார்.

Tags : party Party with Salman Khan threatens Sushant ,Sushant , Party, Actor, Fight, Sushant, Intimidated Salman Khan, Bhagir Information
× RELATED நடிகை ஸ்ரீ தேவி மரணம் மூடி...