×

கூட்டத்தில் புகுந்து கத்திக்குத்து இங்கிலாந்தில் தீவிரவாத தாக்குதலில் 3 பேர் பலி

லண்டன்: இங்கிலாந்தில் ரீடிங் நகரில் உள்ள போர்பரி பூங்கா அருகே நேற்று முன்தினம் இனவெறிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது, தீவிரவாதி ஒருவன் புகுந்து கூட்டத்தில் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த தேம்ஸ் காவல் நிலைய போலீசார் இச்சம்பவம் தொடர்பாக லிபியாவை சேர்ந்த 25 வயது இளைஞனை கைது செய்தனர். இதனிடையே, இனவெறிக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால், இந்த போராட்டம் 3 மணி நேரத்துக்கு முன்பே முடிந்து விட்டதாகவும், இதற்கும் கொலை சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், இது குறித்து பிபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தேம்ஸ் காவல்நிலைய அதிகாரி, இது, தீவிரவாதம் சம்பந்தப்பட்ட தாக்குதலாக தெரிகிறது. இந்த வழக்கு தீவிரவாத தடுப்பு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.

Tags : UK ,terror attack , Knight, UK terrorist attack kills 3
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...