×

கொரோனா தொற்றால் பாதிப்பு திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பலராமன் மரணம்

சென்னை: வடசென்னை மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் பலராமன் கொரோனா தொற்று காரணமாக நேற்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 77. வடசென்னை மாவட்ட திமுக முன்னாள் செயலாளராக இருந்தவர் எல்.பலராமன். திமுகவின் தணிக்கைக்குழு உறுப்பினராக இருந்து வந்தார். சென்னை அண்ணாநகர் 13வது மெயின் ேராடு, சாந்தி காலனி வசித்து வந்தார். மூன்று நாட்களுக்கு முன் இவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது ரத்த பரிசோதனையில் கொரோனா நோய்தொற்று உறுதியானது.

மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் பலராமனுக்கு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிகிச்சை பலனின்றி பலராமன் பரிதாபமாக மரணமடைந்தார். நேற்று மாலை 3 மணியளவில் அவரது உடலை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அரும்பாக்கம் சுடுகாட்டில் உறவினர்கள் முன்னிலையில் பாதுகாப்புடன் அடக்கம் செய்தனர்.  பலராமன் மறைவால் வாடும் அவரது குடும்பத்துக்கும் உறவினர்களுக்கும் தொண்டர்களுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.


Tags : Balaraman Balaraman ,DMK , Coronavirus death , DMK former, district ,secretary Balaraman
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...