×

பக்தர்கள் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு கோயில்களை ஜூலையில் திறக்க முடிவு

சென்னை: தமிழகத்தில் கொரோனோ பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே கோயில்களில் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கும் வகையில் ஆன்லைன் முன்பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க அறநிலையத்துறை கல்வி மற்றும் தொண்டு நிறுவன இணை ஆணையர் மங்கையர்க்கரசி நியமிக்கப்பட்டார்.

அவர், அந்தந்த கோயில் மண்டல இணை ஆணையரிடம் இப்பணிகளின் நிலை என்ன என்பது குறித்து அவ்வப்போது ஆலோசனை செய்து அறிவுரை வழங்கி வந்தார்.இதற்கிடையே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 4 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள முக்கிய கோயில்களை ஜூலை 10ம் தேதியில் திறக்க அறநிலையத்துறை திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



Tags : Devotees , Devotees,decided , online booking temples, July
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...