×

கொரோனா பாதிப்பில் மீண்டும் 2-ம் இடத்தில் தலைநகர் டெல்லி....! ஒரே நாளில் 3000 பேருக்கு பாதிப்பு: 63 பேர் உயிரிழப்பு

டெல்லி: டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை கடந்தது. டெல்லியில் மேலும் 3000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,746-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2175-ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று ஒரே நாளில் 3,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 59,746 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 63 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2175 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர் என டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Tags : Capital Coronation Delhi ,half ,Corona , Corona, capital Delhi, casualties
× RELATED தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன் செல்போனை ‘OFF’செய்யுங்க!