×

வேதாரண்யம் அருகே கஜா புயல் நிவாரணத்தில் கையாடல்?

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தலைஞாயிறு ஊராட்சியில் கஜா புயல் நிவாரணம் 89 லட்சம் ரூபாயை கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பணத்தை முறையாக செலவிடாமல் செயல் அலுவலர், பணியாளர்கள் உள்ளிட்டோர் மோசடி செய்து விட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி கையாடல் செய்த பணத்தை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Vedaranyam, Khaja Storm Relief, Handling
× RELATED கன்னியாகுமரி கடற்கரையில் பகவதியம்மனுக்கு ஆறாட்டு