சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அரைமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருகிறது.