×

ஸ்ரீபெரும்புதூர் அருகே பைக்கில் வைத்த ரூ.3 லட்சம் அபேஸ்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பைக்கில் வைத்திருந்த ₹3 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (47). நேற்று முன்தினம் புருஷோத்தமன், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றார். அங்கு தனது கணக்கில் இருந்து ₹3 லட்சம் எடுத்து கொண்டு பைக்கில் வல்லக்கோட்டைக்கு புறப்பட்டார்.

ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே சென்றபோது, அங்குள்ள ஒரு ஜூஸ் கடை முன்பு பைக்கை நிறுத்தினார். பணப்பையை பைக் பெட்ரோல் டேங்கில் உள்ள பையில், வைத்துவிட்டு கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கில் வைத்திருந்த பணத்தை காணாமல் அதிர்ச்சியடைந்தார். புகாரின்படி ஸ்ரீபெரும்புதூர் வழக்குப்பதிவு செய்து, பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், அதே பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரிக்கின்றனர்.


Tags : Sriperumbudur , Sriperumbudur, Paikil, Rs 3 lakhs, Abes
× RELATED ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கிராமங்களில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு