×

சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோயிலில் இன்று பக்தர்களுக்கு அனுமதி ரத்து

திருமலை: சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோயிலில் இன்று பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று காலை 10.18 மணி முதல் பிற்பகல் 1.38 மணி வரை  நீடிக்கிறது. இதையொட்டி, திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றிரவு 8.30 மணிக்கு ஏகாந்த சேவையுடன் கோயில் கதவுகள் மூடப்பட்டது.

இத்துடன் இன்று மதியம் 2.30 மணிக்கு (சூரிய கிரகணம் முடிந்ததும்) கோயில் கதவுகள் திறக்கப்பட்டு  மாலை 6 மணி வரை சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் நடத்த உள்ளனர். இதில் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்பர். இரவு  8 மணி முதல் 8.30 மணி வரை ஏகாந்த சேவையுடன் கோயில் மூடப்படும். எனவே, இன்று முழுவதும் ஏழுமலையான்  கோயிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.


Tags : Pilgrims ,Tirupati temple , Permission, cancellation of the solar eclipse at the Tirupati temple today
× RELATED திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க...