×

சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் நியமிக்கப்பட்ட மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிப்பு

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் நியமிக்கப்பட்ட மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. இந்த மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர், சுகாதாரத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், தற்போது மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை விடுவித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி திருவொற்றியூர் மண்டலத்துக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் காமராஜ்க்கு பதில் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன், மாதவரம் மண்டலத்துக்கு கால்நடைத்துறை இயக்குனர் ஞானசேகரனுக்கு பதில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் மோகன், தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உள்துறை இணை செயலாளர் மணிகண்டனுக்கு பதில் கூட்டுறவு சங்க பதிவாளர் பாலசுப்ரமணியம் மாற்றப்பட்டுள்ளனர்.


Tags : Chennai ,IAS officers , 3 more IAS officers ,released , coronation detention , Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...