* அரசுக்கு அறப்போர் இயக்கம் கோரிக்கை
சென்னை : அறப்போர் இயக்கத்தின் அமைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், சுகாதாரத் துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்தும், குணமானவர்கள் குறித்தும் தமிழக அரசு தினமும் அளித்து வரும் புள்ளி விவரங்களில் குளறுபடி உள்ளது.தமிழகம் முழுவதும் தினமும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவேண்டும். சென்னையில் மட்டும் 50 ஆயிரம் பேருக்கு தினமும் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். சோதனை அதிகரிக்கப்படவில்லை.
மேலும், முந்தைய நாள் பட்டியலில் கூறப்பட்டுள்ள எண்ணிக்கைக்கும் அடுத்த நாள் பட்டியலுக்கும் வேறுபாடுகள் உள்ளன. இதை சரி செய்ய வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள், வென்டிலேட்டர்கள், ஆக்ஜிசன் வசதியுடன் உள்ள படுக்கைகள், ஐசியூ ஆகியவற்றின் எண்ணிக்கை, பயன்பாட்டில் உள்ளவை, காலியாக உள்ளவை போன்ற விவரங்களை அரசு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.