டெல்லி: உலக நாடுகள் சர்வதேச விமான சேவையை தொடங்கினால் இந்தியாவும் தொடங்கும் என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். வந்தேபாரத் திட்டம் மூலம் 1,09,203 பேர் நாடு திரும்பியுள்ளனர். உதயன் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் இருந்து மருத்துவ பொருட்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. 588 விமானங்கள் மூலம் 1,928 டன் மருத்துவ பொருட்கள் வரவழைக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.