புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி நாளை அறிவிக்கப்படும் என்று நாராயணசாமி கூறியுள்ளார். அரசு விதிக்கும் கடும் கட்டுப்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் கூறியுள்ளார். உள்துறை அமைச்சகம் அனுமதியளித்தவுடன் இந்த மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.