டெல்லி: அனைத்துக்கட்சி கூட்டத்தில் சீன அத்துமீறல் பற்றி பிரதமர் கூறியதை தவறாக திசை திருப்புகிறார்கள் என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. சண்டைக்கு பின் சீனா அத்துமீறவில்லை என மோடி பேசியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சீனாவின் முயற்சி பாதுகாப்பு படையினரின் துணிச்சலான செயலால் முறியடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.