சென்னை: தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், வோவை மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். மேலும் தருமபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாயுப்பு உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.