சென்னை: சென்னை குருநானக் கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். குருநானக் கல்லூரியில் 300 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் 200 படுக்கைகள் கூடுதலாக அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.