நாகை: 3 மாதங்களுக்கு பிறகு நாளை மறுநாள் முதல் கடலுக்குச் செல்ல நாகை விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். தனிமனித இடைவெளியுடன் மீன் விற்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் கடைப்பிடிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகமாக உள்ளதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மீனவர்கள் கடந்த 3 மாதமாக கடலுக்கு செல்லவில்லை.