இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு பதில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தேனாம்பேட்டை மண்டலத்துக்கு நில நிர்வாக சீர்திருத்தத்துறை இயக்குனர் சந்திரசேகர் சாஹாமூரிக்கு பதில் உள்துறை இணை செயலாளர் மணிகண்டன், வளசரவாக்கம் மண்டலத்துக்கு சம்ஹாரா சிக்ஷா திட்ட கூடுதல் இயக்குனர் வெங்கடேஷ் பதில் சென்னை குடிநீர் வடிகால் வாரிய செயல் இயக்குனர் பிரபுசங்கர், பெருங்குடி மண்டலத்துக்கு தொழிற்சாலை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்படுத்துதல் அமைப்பு செயல் இயக்குனர் அனீஸ் சேகர் பதில் தமிழ்நாடு உப்பு கழக மேலாண்மை இயக்குனர் அமுதவல்லி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், பெருங்குடி மண்டலத்துக்கு கடந்த 17 தேதி தான் அனீஸ் சேகர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 3 நாட்களில் அவர் மீண்டும் மாற்றப்பட்டுள்ளார்.