×

இசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு

துரைப்பாக்கம் : சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு அதிகரிப்பதால், நேற்று முதல் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பபட்டது. இதனால், சென்னையில் உள்ள வெளி மாவட்ட மக்கள், தங்களது சொந்த ஊருக்கு படையெடுக்கின்றனர். இதையொட்டி, ராஜிவ்காந்தி சாலையில் பெருங்குடி, செம்மஞ்சேரி சுங்கச்சாவடிகள், கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு சுங்கச்சாவடிகள், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரனூர் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, இ பாஸ் உள்ளவர்கள் மட்டும்  னுமதிக்கப்படுகின்றனர். முறையான அனுமதி இல்லாமல் வருபவர்களை திருப்பி அனுப்புகின்றனர். மேலும் அத்தியாவசிய பணிகளுக்காக செல்பவர்கள் மட்டுமே, வாகனங்களில் சென்னையில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்துக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து சென்னைக்கும் செல்ல அனுமதிக்கின்றனர்.

Tags : ECR ,roads ,OMR ,lockdown , full lockdown ,ECR,OMR ,Police control
× RELATED குற்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி பொருத்தி போலீசார் கண்காணிப்பு