×

சஹாரா பரிவார் நிறுவனத்தில் 4 லட்சம் ஊழியருக்கு பதவி உயர்வு

சென்னை : இந்திய ரயில்வேக்கு அடுத்தபடியாக அதிக ஊழியர்களை கொண்ட நிறுவனம் சஹாரா இந்தியா பரிவார்.  கடந்த 1978ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் நிதி சேவை, கல்வி, தொழில்நுட்பம், ஆயுள் காப்பீடு, ரியல் எஸ்டேட், செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களை நடத்தி வருகிறது. 5 ஆயிரம் கிளைகளுடன் செயல்படும் இந்த நிறுவனத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது, ஊரடங்கு காரணமாக பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துவரும் நிலையில் சஹாரா பரிவார் நிறுவனம், இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவதில்லை என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 4 ஆயிரத்து 808 அலுவலக பணியாளர்கள் மற்றும் 4,05,874 களப்பணியாளர்களுக்கு கடந்த 10ம் தேதி ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் உலகமே பொருளாதார பிரச்னைகளில் சிக்கியுள்ள நிலையில் மனிதாபிமான அடிப்படையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர கொரோனாவால் சொந்த ஊருக்கு திரும்பியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பணி வழங்கவும் தீர்மானித்துள்ளோம்’ என தெரிவித்துள்ளது.

Tags : Sahara Parivar , Sahara India,Employees ,promotion
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...