சென்னை: மருத்துவப் படிப்புகளில் ஒபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. ஒபிசி இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு, திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்திருந்தன.