பல்லடம்: திருப்பூர் அருகே மகனே சொத்துக்களை அபகரித்துக் கொண்டு ஏமாற்றியதால் ஆதரவற்ற பெற்றோர்கள் கருணை கொலை செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். பல்லடம் அருகே உள்ள ராயர் பாளையத்தை சேர்ந்தவர்கள் சென்னியப்பன் - கருணையம்மாள் தம்பதியர். இவர்களது மகன் 10 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னியப்பனுக்கு சொந்தமான இரண்டு அரை ஏக்கர் நிலத்தை ஏமாற்றி எழுதி வாங்கிக்கொண்டதாக தெரிகிறது.
இதனையடுத்து வயதான பெற்றோரை கவனிக்காமல் வீட்டை விட்டு துரத்திவிட்டதாக சென்னியப்பன் ஏற்கனவே காவல் நிலையத்தில் பல முறை புகார் அளித்துள்ளார். அந்த புகார்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே ஆதரவற்ற தங்களை கருணை கொலை செய்ய வேண்டி வயதான தம்பதியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.