மதுரை : மதுரை மாட்டுத் தாவணி பழ மார்க்கெட்டில் கடை ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.4 ஊழியர்களுக்கும் கொரோனா உறுதியானதால் மதுரை மாட்டுத் தாவணி பழ மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.பழ மார்க்கெட்டில் பணிபுரியும் அனைத்து ஊழியருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.