திருப்போரூர் : திருப்போரூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை பெண் மருத்துவர் வீட்டுக்கு, அவரது உறவினர் பெண் மகப்பேறு சிகிச்சைக்காக வந்துள்ளார். அவருக்கு கடந்த வாரம் குழந்தை பிறந்தது.இந்நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் கேளம்பாக்கம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.அதேபோல் கோவளம் மீனவர் பகுதியை சேர்ந்த 40 வயது மீனவருக்கு, கொரோனா தொற்று உறுதியானது.