×

கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் அனைத்து வார்டுகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துக : உச்சநீதிமன்றம்

டெல்லி : கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் அனைத்து வார்டுகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று கொரோனா நோயாளிகளுக்கான முறையான சிகிச்சை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் உள்ள குறைகளை களைய நிபுணர் குழு பார்வையிட வேண்டும் ,கொரோனா சிகிச்சைக்கு நாடு முழுவதும் நியாயமான ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும், கொரோனாவால்  இறந்தவர்களின் உடல்களை கண்ணியமாக கையாளுவதில் உள்ள குறைகளை களைய வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளையும் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.



Tags : Supreme Court ,Corona ,hospitals , Corona, treatment, hospital, wards, CCTV, cameras, Supreme Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...