×

கீழடியில் இணைப்பு குழாய் பானைகள் கண்டுபிடிப்பு.: தொழிநுட்பத்தை பயன்படுத்தி நீரை சேமித்த தமிழர்கள்

கீழடி: கீழடி அகழ்வாய்வு பணியில் கால்வாய் வழியாக தண்ணீரை கொண்டு செல்ல இணைப்பு குழாயாக பானைகள் பயன்டுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் 6-ம் கட்ட அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பலம் தொழிற்சாலை அமைப்பின் தொடர்ச்சியாகவே எச்சங்கள் தென்பட்டுவருகிறது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கால்வாய் வழியாக தண்ணீரை கொண்டு சென்றதுகான சுவடுகள் கிடைத்துள்ளது.

மேலும் கிடைக்கப்பட்டுள்ள பானைகள் அனைத்தும் இணைப்பிற்காக பயன்படுத்தப்பட்டவை போன்றே அமைந்துள்ளதாகவும், தண்ணீரின் போக்கை திசை திருப்ப அவை பயன்படுத்தப்பட்ட சாத்தியங்கள் உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பானைகள் முழுமையாக ஆய்வு செய்த பின்னர் அதன் பயன்பாடு குறித்து இறுதி அறிவிக்கை வெளியிடப்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : Bottom ,line ,pipe ,pots, discovery, technology
× RELATED 7 இடங்களில் 106 டிகிரி வெயில்...