×

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரம் வெளியீடு

கோபி: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரம் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோபி அருகே எலத்தூரில் குளம் தூர்வாரும் பணியை நேற்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தகவல் கேட்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத தயாராக உள்ள மாணவர்கள் குறித்த பட்டியல் பெறப்பட்ட பின் முடிவு செய்யப்படும். அதே நேரத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரம் வெளியாகும். தற்போது மதிப்பெண் பட்டியல் தயாராகி வருகிறது.

மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை குறைப்பது குறித்த பணி நடந்து வருகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப பருவத்தேர்வு ரத்து செய்யப்படுமா? என்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார். தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்தும் முடிவு செய்யப்படும். தனியார் பள்ளிகள் பிளஸ் 1 வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து இதுவரை புகார் வரவில்லை. புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து தனியார் பள்ளிகளுக்கு இயக்குநர் மூலம் அறிவுரையும், கடிதமும் வழங்கப்படுள்ளது.

கொரோனா காரணமாக புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தாமதமாகி உள்ளது. இம்மாத இறுதிக்குள் தயாராகும் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப முதல்வர் முடிவு செய்வார்.  இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


Tags : Plus 2 exam results released the first week of July
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...