×

மிசோரமில் உள்ள சம்பாய் பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0-ஆக பதிவு

ஐஸ்வால்: மிசோரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 7.29 மணி அளவில் மிசோரத்தின் சம்பாய் 98 கி.மீ தென்கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.0-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பல்வேறு கட்டுமானங்கள் சேதமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, திறந்தவெளியில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை.


Tags : Earthquake ,Mizoram ,National Center for Seismology ,Champhai , Mizoram, Sambai, earthquake
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்