×

மக்கள் மனதில் அச்சத்தை... உச்சத்தில் விதைத்த கொரோனா: தமிழகத்தில் இன்று மேலும் 2,141 பேருக்கு தொற்று உறுதியானது: அறிக்கை வெளியிட்ட சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் மேலும் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 52,334-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா  வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 366,946 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 12,881 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 334 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம்   அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 12,237 பேர் உயிரிழந்த நிலையில் 194,325 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிக்கையில் வெளியிட்டதாவது:..

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 28,641 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 1,017 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 49 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 625-ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 1,373 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 37,070 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 81 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 23,065 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை 7,63,506 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 55.03% ஆக உள்ளது.

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 26,736 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 2,141 பேருக்கு தொற்று உறுதியானது.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 32,241 ஆண்கள், 20,073 பெண்கள், 20 திருநங்கைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;

     ^ மகாராஷ்டிரா - 23
     
     ^ டெல்லி - 6

     ^ கேரளா - 3

     ^ ராஜஸ்தான் - 02

     ^ புதுச்சேரி - 1

     ^ குஜராத் - 3

     ^ கோவா - 1

     ^ அசாம் - 1

* வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

     ^ கத்தார் - 6

     ^ சிங்கப்பூர் - 3

     ^ மாலத்தீவு - 2

Tags : Tamil Nadu , Tamil Nadu, Corona, Health Department
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...