×

இந்திய பகுதிகள் அடங்கிய புதிய வரைபடத்திற்கு நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி ஒப்புதல்

காத்மாண்டு: இந்திய பகுதிகள் அடங்கிய புதிய வரைபடத்திற்கு நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்திற்குட்பட்ட சில பகுதிகளான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா ஆகியவற்றை தங்களுக்கு சொந்தம் என கூறிக்கொண்டு நேபாள அரசு புதிய வரைபடத்தை கடந்த மே மாதம் வெளியிட்டது. இந்த வரைபடத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேபாளம் தன் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் மாற்றம் செய்வதற்கான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்தது.

இதன் மீது விவாதம் இன்று நடந்தது. பின்னர் பிரதிநிதிகள் சபையில் நடந்த ஒட்டெடுப்பில் மொத்தமுள்ள 275 உறுப்பினர்களில் மசோதாவுக்கு ஆதரவாக 258 பேர் ஆதரவாக ஒட்டளித்தனர். இதையடுத்து மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேறியது. இதனையடுத்து நேபாளம் அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளது. இந்நிலையில் இந்திய பகுதிகள் அடங்கிய புதிய வரைபடத்திற்கு நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி ஒப்புதல் அளித்துள்ளார். முன்னதாக நோபளம் அரசின் இந்த செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது வரைபடம் மாற்றம் பற்றி இந்தியா தனது நிலையை அதிகாரப்பூர்வமாக நேபாளத்துக்கு தெரிவிக்கும்.

நேபாளத்தின் நடவடிக்கை வரலாற்று ரீதியான, ஆதாரத்தின் அடிப்படையில் இல்லை. எல்லைப் பிரச்சனையை பேசி தீர்ப்பதற்கு நேபாளத்தின் நடவடிக்கை ஊறுவிளைவிக்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Bidya Devi Bhandari ,Nepal ,Pithya Devi Bhandari ,India , Indian Territory, New Map, Nepal President Bidya Devi Bhandari, Approved
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது