×

விழுப்புரம் மாவட்டத்தில் துணை நடிகைகளை ஏமாற்றி அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற தொழிலதிபர் உட்பட 3 பேர் கைது..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் துணை நடிகைகளை ஏமாற்றி அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த தந்திராயன் குப்பத்தில் உள்ள விருந்தினர் மாளிகைகளை சில நாட்களாக காவல்துறையினர் ஆய்வு செய்து வந்தனர். அப்போது புதுச்சேரியைச் சேர்ந்த ஏடிஎம் மோசடிக்காரரும், தொழிலதிபருமான சந்துரு ஜி என்பவருக்கு சொந்தமான ஒரு விருந்தினர் இல்லத்தையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் மேற்கொண்ட ஆய்வில் அங்கு ஸ்பா அழகு நிலையம் ஒன்று இயங்கி வருவதும் அதில் பாலியல் தொழில் நோக்கத்துடன் இரண்டு பெண்களை அடைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த இரண்டு பெண்களும் துணை நடிகைகளாக பணியாற்றி வந்தவர்கள்.  அவர்களை வளசரவாக்கத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு அழகுகலை மற்றும் மசாஜ் தொழில் கற்றுத் தருவதாக கூறி அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் நோக்கத்துடன் அடைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் சந்துரு ஜி மற்றும் அவரது நண்பர் விஜயகுமார் விருந்தினர் இல்லத்தில் காவலாளியாக பணிபுரிந்த டெல்லியைச் சேர்ந்த அனில் ஜோசப் ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த காவல்துறையினர் ஸ்பா அழகு நிலையத்துடன் விருந்தினர் இல்லத்துக்கு சீல் வைத்தனர்.

Tags : district ,actresses ,persons ,Villupuram ,businessman ,district police , Villupuram, abuse worker, businessman, 3 persons arrested
× RELATED ஜெயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 3 மாட்டுவண்டிகள் பறிமுதல்