×

தேசியகீதம் பாடினால் சான்றிதழ்: புதுவை போலீஸ் நூதனம்: சமூக வலைதளங்களில் வைரல்

புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டை சாமிபிள்ளைத் தோட்டத்தில் வசிக்கும் பி.காம் முடித்த வாலிபர், தனியார் வங்கியில் வேலையில் சேர்ந்த நிலையில் தன் மீது எந்த வழக்கும் காவல் நிலையத்தில் இல்லை என்பதற்கான சான்றிதழை வாங்க காவல் நிலையம் வந்துள்ளார்.  அவரிடம் இதற்கான விண்ணப்ப கடிதத்தை பெற்ற காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், அந்த இளைஞரிடம் சான்றிதழ் தரவேண்டுமெனில், தேசிய கீதத்தை ஒருமுறை பாடுமாறு கூறியுள்ளார்.

அவர் சரியாக பாடாததால் சான்றிதழ் வழங்காத அதிகாரி, மறுநாள் வந்து தேசிய கீதத்தை பாடிவிட்டு சான்றிதழ் பெற்றுச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தார்.  இதனிடையே நேற்று மீண்டும் காவல் நிலையம் வந்த அந்த வாலிபர், தேசிய கீதத்தை முழுமையாக அதிகாரியிடம் பாடி முடித்து சான்றிதழை அவரிடமிருந்து பெற்றுச் சென்றார். இத்தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



Tags : Police Station , Singing ,National Anthem Certificate, New Police Station,Viral , social networks
× RELATED திருப்போரூர் காவல் நிலையத்தில் மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து