×

கோவை வாளையார் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை கும்கி உதவியுடன் விரட்டியடிப்பு

பாலக்காடு:  கோவையை அடுத்த வாளையார் அருகே நேற்று முன்தினம் ஊருக்குள் புகுந்த காட்டு யானை,  கும்கி யானைகள் உதவியுடன் வனத்திற்குள் விரட்டியடிக்கப்பட்டது. கேரள-  தமிழக எல்லையான வாளையார் காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை  ஒன்று வாளையார், கஞ்சிக்கோடு, மலம்புழா, ஆரங்கோட்டுக்குழம்பு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இந்த  யானையின் அட்டகாசத்தால் ஊர்மக்கள் பீதியடைந்து வீட்டைவிட்டு வெளியே வர  முடியாமல் அவதியடைந்து வந்தனர்.

இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட  வேண்டும் என பொதுமக்கள், வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கோணி என்ற பகுதியில் இருந்து நேற்று முன்தினம் கும்கி யானைகள்  வரவழைக்கப்பட்டன. இந்த யானைகளை கொண்டு காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர்  ஈடுபட்டனர். காட்டு யானை அங்குள்ள ரயில்வே தண்டவாளம் வழியாக வனத்திற்குள் நேற்று முன்தினம் இரவு விரட்டியடிக்கப்பட்டது. காட்டு யானை விரட்டப்பட்டதால் அப்பகுதி மக்கள்  நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags : dealer ,town ,Coimbatore , Wild Elephant Kumki, Help , Wild Elephant
× RELATED செங்கல்பட்டில் பைக் திருடன் அதிரடி கைது