×

ஜூலை மாதம் நடத்தவுள்ள தேர்வை ரத்து செய்ய முடியுமா? சி.பி.எஸ்.இ நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: 10 மற்றும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வது பற்றி சி.பி.எஸ்.இ நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று அறிவுறுத்தியுள்ளது. கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் நடத்த இருந்த பொதுத் தேர்வுகளை ரத்து செய்துள்ளது. ஆனால் சி.பி.எஸ்.இ நிர்வாகம் நிலுவையிலுள்ள பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் மற்றும் இதர பிற தேர்வுகளை வரும் ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் மாணவர்களின் பாதுக்காப்பு நலனை அடிப்படையாக கொண்டு தமிழகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ததை மேற்கோள்காட்டி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் மேற்கண்ட மனுக்கள் அனைத்தும் நேற்று காலை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், “ஜூலை மாதம் தேர்வுகள் நடத்தப்பட்ட உள்ளதாக சி.பி.எஸ்.இ நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்று காரணத்தினால் முன்னதாக திட்டமிடப்பட்டுள்ள தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, அதற்கு முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண் ணை அடிப்படையாக கொண்டு தேர்ச்சி முடிவுகளை அறிவிக்க முடியுமா என்பது குறித்து சி.பி.எஸ்.இ நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும். மாணவர்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்துகிறது’’ என தெரிவித்த நீதிமன்றம் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

Tags : administration ,Supreme Court ,CBSE , Cancel Examination, CBSE Administration, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...