×

சேலம் அருகே பயங்கரம் மர்மபொருள் வெடித்து விவசாயி முகம் சிதறி பலி: பேத்தி உள்பட 4 பேர் படுகாயம்

சேலம்: சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை அடுத்துள்ள தும்பல்பட்டியை சேர்ந்தவர் மணி(50). விவசாயியான இவருக்கு அம்சவேணி என்ற மனைவியும் சத்யா என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. சவுமியா(14) என்ற மகள் உள்ளார். சில தினங்களுக்கு முன்பு விவசாயி மணி, காட்டுப்பகுதியில் கிடந்த பொருள் ஒன்றை எடுத்து வந்தார். அதனை வீட்டில் வைத்து விட்டு, நேற்று காலை வேலைக்கு சென்று விட்டார். பகல் நேரத்தில் வீட்டிற்கு வந்த அவர், அந்த பொருளை பிளக்கில் சொருகி சுவிட்சை போட்டார். அப்போது அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.சத்தம் கேட்டு அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்தனர். மணி விழுந்து கிடந்தார். அவரது ஒரு கை சிதைந்து போனதுடன், முகமும் சிதைந்துபோய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அருகில் இருந்த அவரது பேத்தி சவுமியா, அண்ணன் மகன் வசந்தகுமார்(38) நண்பர் நடேசன்(50) ஆகியோரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் எஸ்.பி. தீபாகனிக்கர், ரூரல் டிஎஸ்பி உமாசங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வெடித்த பொருள் ரேடியோ போல இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் வெடித்த இடத்தில் ஏற்பட்ட சேதத்தை பார்க்கும்போது, வெடிபொருள் வெடித்ததுபோல காட்சி அளிக்கிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை நடத்தினர். சிதறி கிடந்த மர்மபொருளின் சிதறல்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.


Tags : granddaughter ,Salem , Farmer's face,as terror mystery explodes, Salem, 4 dead, including,granddaughter
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...