சென்னை: சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பால முரளி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் திரு. பாலமுரளி கொரோனா காரணமாக உயிர் இழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவரது உயிர்த்தியாகத்திற்கு அஞ்சலி செலுத்துகிறேன். மக்களைக் காக்கும் பணியில் இருந்த ஆய்வாளரே உயிரிழக்கிறார். இத்தகையோரின் பாதுகாப்பை எப்பொழுது இந்த அரசு உறுதிப்படுத்தும்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.