×

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிஅதிமுக எம்எல்ஏ மனைவி, மகள் உள்பட 4 பேருக்கு கொரோனா

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி (61) காய்ச்சல் காரணமாக கடந்த 12ம் தேதி மணப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சோதனையில்அவருக்கு  கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து எம்எல்ஏ பழனியின் மனைவி, மகன், மருமகள், மகள், மருமகன் உள்பட 30 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தினர். பரிசோதனையில் எம்எல்ஏ பழனியின் மனைவி விஜயா (50), மகள் திவ்யா (29), மாமியார் பாளையம்மாள் (70), கார் டிரைவர் டெய்லிஸ் (50) ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

இதைதொடர்ந்து அவரது மனைவி, மகள் ஆகியோர் மணப்பாக்கம் தனியார் மருத்துவமனையிலும், மாமியார், கார் டிரைவர் ஆகியோர் பெரும்புதூர் அடுத்த தண்டலம் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எம்எல்ஏ பழனியின், மகள் திவ்யாவிடம் முதல்வர் எடப்பாடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவமனைக்கு நேரில் சென்று, டாக்டர்களிடம் சிகிச்சை குறித்து விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Corona ,assembly ,Sriperumbudur ,Coronation ,assembly constituency , Sriperumbudur Legislative Assembly, Adhikar MLA, Wife, Daughter, Corona
× RELATED செங்கல்பட்டில் அனைத்து கட்சி...