புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மாஸ்க் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். தொடர்ந்து மாஸ்க் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாஸ்க் அனியாதவர்களுக்கு இன்று முதல் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும். அதிக பயணிகளை ஏற்றினால் சம்மந்தப்பட்ட அரசு, தனியார் பேருந்துகளை இயக்க தடை விதிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.