ராமநாதபுரம்: லடாக் எல்லையில் சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினருக்கு ராமநாதபுரம் ஆட்சியர் வீர ராகவ ராவ் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் நிதியுதவியை அவரது குடும்பத்தாரிடம் வழங்கியுள்ளார்.